மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம்.! புதிய செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு செயலராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

The post மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம்.! புதிய செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: