தஞ்சாவூர், மே 25: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியம் அருந்தபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட உத்தமர்குடியில் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 14. லட்சத்தில் புதியதாக கட்டபட்ட பொதுவிநியோக கட்டிடம் பொது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பி.எஸ்.குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணபிரியாவிஜயகுமார் முன்னிலை வகித்தார். அருந்தவபுரம் ஊராட்சிமன்ற தலைவர் சரிதாஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட பொதுவிநியோக கட்டிடத்தை திறந்து வைத்து அத்யாவசிய பொருள்களை வழங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மனிதநேய மக்கள் கட்சி , தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹமதுரிஃபாயி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா. அருந்தபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் காமராஜ், ஊராட்சி சங்க நிர்வாகிகள் ஜெகத்குரு, மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post பாபநாசம் அருகே புதிய அங்காடி கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.