பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

பேராவூரணி, ஜூலை. 2: பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்பாபு, உதவி ஆளுநர் சிவச்சந்திரன் ஆகியோர் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைந்தனர். புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி பேசினர்.

தலைவராக டாக்டர் ரவிச்சந்திரன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக வீரராகவன் ஆகியோர் பணி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் தலைவர்கள் நாகராஜன், சுப்பிரமணியன், திருப்பதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: