தமிழக அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழு புதிய உறுப்பினர்கள் விவரங்களை எமிஸில் பதிவேற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 

வேலூர், ஆக.19:
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிதாக தேர்வான உறுப்பினர்கள் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26ம் ஆண்டுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி முதல்கட்டமாக 12,117 ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி எஸ்எம்சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து 2வது கட்டமாக மீதமுள்ள 11,924 தொடக்கப்பள்ளிகளில் மேலாண்மைக்குழுக்கள் நேற்று மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவற்றில் அதிக எண்ணிக்கையில் ஆதரவு பெற்ற பெற்றோர்கள் எஸ்எம்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

The post தமிழக அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழு புதிய உறுப்பினர்கள் விவரங்களை எமிஸில் பதிவேற்ற வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: