தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,290 பேருக்கு கொரோனா உறுதி; 12 பேர் உயிரிழப்பு – சென்னையில் ஒரே நாளில் 1,188 பேருக்கு தொற்று: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 92 ஆயிரத்து 780 (8,92,780) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், * தமிழகத்தில் மேலும்  3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,92,780 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,715 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,61,424 குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,750 ஆக  உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 4; தனியார் மருத்துவமனையில் 8 என 12 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 1188 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 251141- பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,97,67,310 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 86,066 மாதிரிகள்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 18,606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,38,978 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,899 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,53,766 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,391 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை  யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* ஆந்திரபிரதேசம்  -4* அசாம் -1*ஜார்கண்ட்- 1* தெலுங்கானா – 1* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.*கத்தார்-1…

The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,290 பேருக்கு கொரோனா உறுதி; 12 பேர் உயிரிழப்பு – சென்னையில் ஒரே நாளில் 1,188 பேருக்கு தொற்று: சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Related Stories: