செஸ் ஒலிம்பியாட் போட்டி : கோவை மாநகர பகுதிகளில் செஸ் போர்டு போன்று வண்ணமயமாக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

கோவை : 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் 10க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் செஸ் போர்டை போன்று மின் விளக்குகளால் வண்ணமயமாக்கப்பட்டுள்ளன.இரவு நேரங்களில் இந்த பேருந்து நிறத்தங்கள் பொதுமக்களை கவரும் விதமாக அமைந்துள்ளதால் அங்கு வரும் பொதுமக்கள் இதனை பார்த்து புகைப்படங்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். முதல்கட்டமாக லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் வண்ணமயமாக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்கள் வண்ணமயமாக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

The post செஸ் ஒலிம்பியாட் போட்டி : கோவை மாநகர பகுதிகளில் செஸ் போர்டு போன்று வண்ணமயமாக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் appeared first on Dinakaran.

Related Stories: