கூட்டுறவு உதவியாளர் பணிக்கான தேர்வு: 883 பேர் எழுதினர்

 

காஞ்சிபுரம், டிச. 25: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு 883 பேர் தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியின் மூலம் பெறப்பட்டன.

இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நேற்று காலை 10 மணி மதியம் 1 மணிவரை காஞ்சிபுரம் திருமலை பொறியியல் கல்லூரி மற்றும் திருமலை பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது. இந்த இரண்டு தேர்வு மையங்களிலும் 883 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் தேர்வு அலுவலரும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளருமான ஜெயஸ்ரீ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

The post கூட்டுறவு உதவியாளர் பணிக்கான தேர்வு: 883 பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: