நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சிறையில் கடந்த 13ஆம் தேதி கைதி சபரிவர்மன் மரணமடைந்தார். சிறைக் கைதி மரணம் தொடர்பாக கைதிகள் 8 பேர் மற்றும் 3 சிறை அதிகாரிகள் என 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
