திருவண்ணாமலை, ஏப். 20: வாக்குப்பதிவுக்கு முந்தையை கடைசி 72 மணிநேரம் குறித்து தேர்தல் பார்வையாளர்கள், அலுவலர்களுடன் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது எஸ்ஓபி வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடர்பு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
