இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா டிசம்பரில் வங்கதேசம் செல்கிறார்: சரண் அடையவும் திட்டம்

புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து வங்க தேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது மூத்த கட்சியினருடன் தாயகம் திரும்பி சரணடையத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ஷேக் ஹசீனா கூறும்போது,’ நான் திரும்பும்போது அவர்கள் என்னைக் கைது செய்யலாம், ஒருவேளை என்னைக் கொல்லவும் கூடும். இருந்தாலும், நான் சென்றே ஆக வேண்டும். எனது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஒருவேளை மரணம் வந்தால், அது என் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட, அவர்களின் ரத்தம் சிந்தப்பட்ட என் சொந்த மண்ணிலேயே வர வேண்டும்’ என்று கூறினார்.

Related Stories: