மைசூரு தசரா அக்.11ல் தொடக்கம்

பெங்களூரு: பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் மைசூரு தசரா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதாவது, தசரா தொடக்க விழா சாமுண்டீஸ்வரி கோவிலில் அக்டோபர் 11ம் தேதி தொடங்குகிறது. தசரா விழா கமிட்டி உறுப்பினர்கள் தசரா விழாவை தொடங்கி வைக்கும் சிறப்பு விருந்தினரை தேர்வு செய்யும் அதிகாரத்தை எனக்கு அளித்துள்ளனர்.

இதில் பங்கேற்கும் யானைகளுக்கு ஆகஸ்ட் 26ல் பூஜை நடத்தி அரண்மனைக்கு வரவழைக்கப்படும். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், கலாசார நிகழ்வும் நடைபெறும். அக்டோபர் 21ம் தேதி பகல் 4.10 மணிக்கு புகழ்பெற்ற ஜம்போ சவாரியும் சாமுண்டீஸ்வரி தேவி ஊர்வலமும் நடைபெறுகிறது’ என்றார்.

Related Stories: