பீகாரில் 3,000 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

 

பாட்னா: பீகாரில் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் 2006 – 15 வரை நடந்த பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பீகாரில் 3,000க்கும் மேற்பட்டோர் போலி பட்டங்கள், சான்றிதழ் கொண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தது அம்பலமானது. போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதுவரை பெற்ற ஊதியத்தை வட்டியுடன் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: