அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதன்காரணமாக பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின்படி, பெண் போலீசார் முத்துலட்சுமி, கௌசி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ரேகாவிடம் விசாரணை நடத்தியபோது ரேகா போலீசாரை பார்த்து அசிங்கமாக பேசியதாக தெரிகிறது. காவலர் முத்துலட்சுமி அணிந்திருந்த நம்பர் பிளேட் ப்ளூடூத் ஆகியவற்றை அறுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் வந்து ரேகாவை சமாதானப்படுத்த முயன்றபோது ரேகா, ‘’நான் ஒரு பத்திரிகையாளர் பிறகு அட்வகேட்’’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரேகாவை பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றபோது இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் விசாரணை நடத்தினார். அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்வதும் குடிபோதையில் பெண் காவலருடன் வாக்குவாதம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து மறுநாள் காலையில் காவல்நிலையத்துக்கு வரவேண்டும் என்று கூறி, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே, பணி செய்யவிடாமல் தடுத்ததுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட ரேகா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவலர் முத்துலட்சுமி, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி, வழக்கு பதிவு செய்தனர். இன்று காலை ரேகாவின் வீட்டுக்கு போலீசார் சென்றபோது அங்கிருந்து ரேகா தலைமறைவானது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது விசாரணை நடத்தவந்த பெண் போலீசாரை போதையில் அடித்து உதைத்த இளம்பெண்: வீடியோ எடுத்து டாக்டருக்கு மிரட்டல் appeared first on Dinakaran.
