ஆனால், 17.8.21 அன்று திட்ட முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தும், இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதே காலத்தில் பிற மாநிலங்களில் இத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது வருத்தத்தை அளிக்கின்றது. இந்த நியாயமற்ற அணுகுமுறையின் விளைவாக, 2ம் கட்டத்திற்கான முழு செலவும் மாநில அரசின் வரவு செலவு திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாநில நிதிநிலையில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஒன்றிய அரசு ஒப்புதலை விரைவில் அளிக்க வலியுறுத்துகிறோம்.
The post 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி ஒன்றிய அரசு நிதி தரவில்லை appeared first on Dinakaran.