திருவள்ளூரில் வரும் 8ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் விவசாயிகள்குறை தீர்கூட்டம் வரும் 8ந் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வங்கிகள் துறை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள், இதர துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post திருவள்ளூரில் வரும் 8ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: