திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி மூடப்பட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் வேல்ஸ் வித்யாஷ்ரமம் என்ற தனியார் பள்ளி மூடப்பட்டது. காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 200 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளி இன்று மூடியிருந்ததால் மாணவர்கள், பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஓராண்டாக வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி மூடப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: