எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் விடுவிக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து, செப்டம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும்.ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வரவில்லை. மாநில அரசு நிதியிலிருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

The post எஸ்.எஸ்.ஏ. ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: