தென்காசி மாவட்டம் இராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டம், இராமநதி நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தினை கருத்தில் கொண்டு, இராமநதி பாசனம் – வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றின் நேரடி பாசனம் 1008.19 ஏக்கர் நிலங்களுக்கு 1433-ம் பசலி கார் பருவ சாகுபடி செய்வதற்கு 26.06.2024 முதல் 31.10.2024 வரை 128 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் உள்ள இராமநதி பாசனம்-வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகியவற்றின் நேரடி பாசனம் 1008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்டம் இராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: