பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம், வானதிரையன்பாளையத்தை சேர்ந்த அலெக்சாண்டர் மகள் பிரதிஷா(12). புதூர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்சில் முன் படிக்கட்டில் ஏறினார்.

அதற்குள் பஸ்சை டிரைவர் எடுத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரதிஷா மீது, பின்பக்க டயர் ஏறியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மாணவியை பஸ்சில் வந்த பயணிகள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரதிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

The post பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி appeared first on Dinakaran.

Related Stories: