உ.பி.யில் நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: உ.பி. மாநிலம் ஹத்தரசில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: உ.பி.மாநிலம் ஹத்தரசில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் உயிரிழந்த துயரத்தால் மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். இக்கடினமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக இருப்போம்.

The post உ.பி.யில் நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: