டாஸ்மாக்கில் தகராறு ரயில் முன் பாய்ந்து பாமக நிர்வாகி தற்கொலை

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் ரயில் முன் பாய்ந்து பாமக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சன்னாபுரம் குடியான தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (30). திருவிடைமருதூர் நகர பாமக இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். திருமணமாகத இவர், சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு திருவிடைமருதூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். அப்போது போதையில் இருந்த சிலருக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மணிகண்டனை சிலர் தாக்கியதில் அருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர், செல்போன் மூலம் பாமக நிர்வாகிகள் சிலருக்கு தெரிவித்துள்ளார். இதில் அவர்கள் போலீசில் புகார் கொடுக்கும்படி கூறியிருக்கின்றனர். பாமகவினர் கண்டுகொள்ளாததால் மனமுடைந்த நிலையில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்ட மணிகண்டன், திருவிடைமருதூர் வந்ததும் தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கும்பகோணம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டாஸ்மாக்கில் தகராறு ரயில் முன் பாய்ந்து பாமக நிர்வாகி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: