சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி..!!

சென்னை: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிக்கக் கோரி தாய் மனு தாக்கல் செய்திருந்தார். ரத்த ஓட்ட பாதிப்பால் சத்யா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவர்களின் அனுமதியோடு சத்யாவின் தாயார் மட்டுமே அவரை சந்திக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: