சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லக்கூடிய 102 சென்னை மாநகர அரசு பேருந்து திடீரென நடுவழியிலேயே தீப்பிடித்து எரிய தொடங்கியது. முதற்கட்ட தகவலின் படி சாலைகள் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளிடம் விஷயத்தை தெரிவித்து, அவர்களை உடனடியாக பேருந்தை விட்டு பாதுகாப்பாக இறக்கி விட்டுள்ளனர்

அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் மளமளவென தீப்பிடித்து, பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கும். காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போராடி அணைந்தனர்

பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பயணிகள் எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பாக உயிர் பிழைப்பதற்கு உதலிய ஒட்டுநருக்கும். நடத்துனருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை அடையாறில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: