தங்கக் கடத்தல்: சென்னை விமான நிலைய அதிகாரி வீட்டில் சோதனை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப்பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த சபீர் அலிக்கு விமான நிலைய அதிகாரிகள் சிலரே உதவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின்பேரில் விமான நிலைய அதிகாரி செல்வ விநாயகம் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post தங்கக் கடத்தல்: சென்னை விமான நிலைய அதிகாரி வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: