இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் விடுதலை..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்து அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் 2 பேருக்கு தலா ரூ.40 லட்சமும், மற்றொரு மீனவருக்கு ரூ. 80 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரின் வழக்கு இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அபராத தொகையை கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர் விடுதலை..!! appeared first on Dinakaran.

Related Stories: