சீனாவில் இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா: வண்ண மின் விளக்குகளால் விழாக்கோலம் கண்ட சீன நகரம்!!

பெய்ஜிங்: சீனாவில் இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் பாரம்பரிய அறுவடை திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. சீனாவில் சந்திர நாள்காட்டியை பின்பற்றி பாரம்பரிய திருவிழாக்கள் அனைத்தும் கொண்டாடப்படுகின்றன. இது நாள் கட்டியில் 8வது மாதத்தில் வரும் 15ம் தேதியில் வழக்கமாக இடை இலையுதிர் காலத்தில் தொடக்கமாக சீனர்கள் கணக்கிட்டு வருகின்றனர்.

இதையொட்டி நடைபெறும் 3நாட்கள் அறுவடை திருவிழாவை சீனர்கள் வெகு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டும் அறுவடை திருவிழாவையொட்டி தெற்கு சீனாவில் உள்ள ஷென்ஷென் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வடிவிலான பூந்தொட்டி, மின்மினி பூச்சிகள், நிலவு, முயல்கள், அன்னப்பறவை, டிராகன் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கொண்டாட்டத்தின் முதல் நாளான நேற்று சீனர்கள் குடும்பமாக அமர்ந்து பாரம்பரிய உணவுகளை அருந்தினர்.

2வது நாள் தான் உண்மையான அறுவடை திருவிழாவாகும். 3வது நாளில் கூடுதலாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. தலைநகர் பெய்ஜிங்கிலும் பலவகையான வடிவங்களில் மின் விளக்குகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். சீன பெருஞ்சுவரை போன்ற விளக்கு அமைப்புகள், பிரமாண்டமான மின்விசிறிகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளன. இதற்கிடையே ஷாங்காய் நகரில் சுற்றுலா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்த விழாக்களில் ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் இருந்து 25 குழுக்கள் பங்கேற்றுள்ளன. சீனாவில் அக்டோபர் 6ம் தேதி சுற்றுலா கொண்டாட்டம் நிறைவடைய உள்ளது.

The post சீனாவில் இலையுதிர் காலத்தில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா: வண்ண மின் விளக்குகளால் விழாக்கோலம் கண்ட சீன நகரம்!! appeared first on Dinakaran.

Related Stories: