ஏமனில் இருந்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்

ஜெருசலேம்: ஏமன் நாட்டில் இருந்து நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட மத்திய இஸ்ரேலின் பகுதிகளில் ராக்கெட் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பலர் முகாம்களுக்கு விரைந்தனர். இந்த தாக்குதலால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது. ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் நடத்திய இத்தாக்குதலுக்கு பதிலடி தரப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

The post ஏமனில் இருந்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: