அங்கு விரைந்து வந்த போலீசார், ‘உன்னை யாரும் ஒன்றும் செய்ய மாட்டோம், கரைக்கு வந்துவிடு. இருள் சூழ ஆரம்பித்துவிட்டது’ என கூறி எச்சரித்தனர். ஆனால் திருடன், ‘என்னை அடிப்பீர்கள். நான் வர மாட்டேன். நான் வர வேண்டுமென்றால் முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதல்வர் கேசிஆர், ஊடகத்தினர் வர வேண்டும். அப்போதுதான் சரண் அடைவேன்’ என தெரிவித்தான். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கரையில் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திருடன் ஏரியில் குதித்து இருளில் நீந்தி தப்பிச்சென்றான். தொடர்ந்து போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து, திருடனை தேடி வருகின்றனர்.
The post ‘நான் சரணடைய ரேவந்த் ரெட்டி வரணும்’ போலீசை அலைக்கழித்து ஏரியில் குதித்து தப்பிய திருடன்: ஐதராபாத்தில் 7 மணிநேரம் பரபரப்பு appeared first on Dinakaran.