சீரணி அரங்கம் சேதமடைந்து உள்ளதால் கட்சிக் கூட்டங்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை உள்ளது. அண்ணா மன்றம், பேருந்து நிலையம், உப்பு செட்டியார் தெரு உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சீரணி அரங்கை சீர் செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீரணி அரங்கத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.