ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழந்தனர். சாலை ஓரம் நின்றிருந்த அரசு பேருந்து மீது ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் மோதியது. கோரா விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை சென்று விட்டு விடு திருப்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது. படுகாயம் அடைந்த ஓட்டுநர், ஒரு பெண் ஆகியோ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், செந்தில் மனோகரன், பிரணவிகா, தர்ஷிலாராணி, அங்காள ஈஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர். காரில் பயணித்த 7 பேரும் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: