தமிழகத்தில் லேசான மழை

சென்னை: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளி்ல ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அத்துடன் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். என்று வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழகத்தில் லேசான மழை appeared first on Dinakaran.

Related Stories: