* கே.சி.ஆர் 3வது முறை முதல்வர் ஆவார்: கே.டி.ஆர் நம்பிக்கை
பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் அமைச்சர் கே.டி.ஆர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2 கே.சி.ஆர். மூன்றாவது முறை முதல்வர் ஆவார். மேலும் வாக்கு செலுத்த வரிசையில் வாக்காளர்கள் உள்ள நிலையில் கருத்துகணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களை திசை திருப்பினர். எங்களின் மதிப்பீட்டின்படி 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.
* 71.17 சதவீதம் வாக்குப்பதிவு
தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் நடந்த பேரவை தேர்தலில் மாநிலம் முழுவதும் 64.26 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்த அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்து வந்த தரவுகளை பரிசீலித்த தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் மொத்தம் 71.17 சதவீத வாக்குகள் பதிவானதாக நேற்று அறிவித்தது. இதில் அதிகபட்சமாக யாதாத்திரி போனகிரி மாவட்டத்தில் 90.03 சதவீதமும், குறைந்தபட்சமாக ஐதராபாத்தில் 46.56 சதவீதம் வாக்குப்பதிவானது.
The post பிஆர்எஸ் கட்சி 25 இடங்களை கூட தாண்டாது தெலங்கானா பேரவை தேர்தலில் காங்கிரஸ் சுனாமி ஏற்பட்டுள்ளது: காங். மாநில தலைவர் ஆவேச பேட்டி appeared first on Dinakaran.