ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பீட்டா அமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில்,‘‘ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்களை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட தலைமை நீதிபதி, அதுசார்ந்த மனுக்களை பரிசீலித்த பின்னர் தான் பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

The post ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: