பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமின்றி ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பாஜ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரிதம் கவுடா உள்ளிட்ட மேலும் இருவர் தனது வீடியோவை வைத்து மிரட்டியதாகவும் அதை பகிர்ந்ததாகவும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்காவது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில் நேற்று மீண்டும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதம் கேட்டபின் வரும் 29ம் தேதி வரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
The post பாலியல் வழக்கில் 4வது புகார் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மீண்டும் போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.