ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்வதில் மோடி அரசு எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் பிரித்தறிய முடியாத பகுதியாகும், ஆனால் கல்வானுக்குப் பிறகு சீனாவுக்கு பிரதமர் மோடியின் க்ளீன் சிட் நமது தேசிய பாதுகாப்பு மற்றும் வியூக நலன்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக பீர் பஞ்சாலில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்டுகளின் இலக்கு கொலைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படுவதை விரைவில் காணலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
லடாக் மக்கள், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், அப்பகுதியின் பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒருமித்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மோடி அரசு அவர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு அளித்த வலுவான ஆதரவின் மூலம் எங்களுக்கும் அதைத் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் ஜே கே மற்றும் லடாக்கின் நலன், மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்பதில் உறுதியாக உள்ளன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: மல்லிகார்ஜுன கார்கே..! appeared first on Dinakaran.