கடும் குளிர், பனி மூட்டம் நிலவுவதால் டெல்லிக்கு 2 நாள் ஆரஞ்சு அலெர்ட்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லி வரவிருக்கும் 14 விரைவு ரயில்கள் மற்றும் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு 30 விமானங்கள் தாமதமாக வந்தன. இதுபோன்ற சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைநகர் டெல்லியை பொறுத்தமட்டில் அடுத்த இரண்டு நாளுக்கு கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் இருக்கும் என்பதால், 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கடும் குளிர், பனி மூட்டம் நிலவுவதால் டெல்லிக்கு 2 நாள் ஆரஞ்சு அலெர்ட்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: