மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வயிற்றுப் போக்கு காரணமாக 1700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1300 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் குடிநீர் ஆதாரங்களை தூய்மைப்படுத்தி வருவதாகவும் வீடு வீடாக ஆய்வு செய்வதுடன் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே 14 பேர் கொண்ட ஒன்றிய குழு ஒடிசா மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டது.
The post ஒடிசாவில் காலரா பரவல்.. 21 பேர் பலி; 1700 பேர் மருத்துவமனையில் அனுமதி : ஒன்றிய குழு நேரில் ஆய்வு!! appeared first on Dinakaran.
