பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் என்ஐஏ விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மர்ம பொருள் வெடித்தது. மர்ம பொருள் வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் படுகாயமடைந்தனர். ஏற்கனவே வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துவரும் நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post பெங்களூருவில் மர்ம பொருள் வெடித்த உணவகத்தில் என்ஐஏ விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: