நாசா போட்டிக்கு 5 மாணவர் தேர்வு

 

கோவை ஏப்.25: கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சந்திரமாரி சர்வதேச பள்ளியில் பயிலும் 5 மாணவ மாணவிகள் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்தும் அறிவியல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி போட்டிக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு மாணவ மாணவிகள் தயார் செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொது அறிவு, சமூக மேம்பாடு தொடர்பான தகவல்கள் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர் மூலம் கற்றுத் தரப்பட்டு மாணவ, மாணவிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல், ஆராய்ச்சிகள் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அடித்தளமாக இருக்கிறது. இதற்கான சிறப்பு பயிற்சிகள் மூலமாக மாணவ மாணவிகள் எதிர்கால போட்டி தேர்வுக்கு தயாராக முடியும். பாடம் மட்டுமின்றி அனைத்து தனித் திறன் போட்டியில் சாதிக்கும் வகையிலும் சிறப்பு பயிற்சிகள் பெற வேண்டும் என கோவை சரக போலீஸ் டிஐஜி விஜயகுமார் தெரிவித்தார். மேலும் நாசா போட்டிக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

The post நாசா போட்டிக்கு 5 மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.