மெய்த்தி சமூகத்தவர் மற்றும் வேறு சில பழங்குடியினரின் வீடுகள், தேவாலயங்கள் தீக்கரை ஆக்கப்பட்டன. மோரே நகரில் பதற்றம் நிலவுவதால் அங்கு தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. . இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வன்முறையில் ஈடுபட்ட குக்கி இனத்தவர் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.இதையடுத்து மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்பாமல் இருக்க இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post மணிப்பூரில் இரு சமூகதினரிடையே கலவரம்… 16 மாவட்டங்களில் ஊரடங்கு; 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிப்பு; ராணுவம் களமிறக்கம்! appeared first on Dinakaran.