குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மே 7-ல் தேர்தல் நடந்தபோது வாக்குச்சாவடிக்குள் இருந்து பாஜக பிரமுகர் விஜய் பாபார் நேரலை வீடியோ வெளியிட்டது சர்ச்சையானது. வாக்குச்சாவடியை கைப்பற்றி பாஜகவுக்கு வாக்களித்த காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் பாஜக தலைவரின் மகனான விஜய் பாபார் கைது செய்யப்பட்ட நிலையில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: