இந்நிலையில் பல்நாடு மாவட்டம் மச்செர்லா சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது ஜங்கமேஸ்வரபாடு கிராமம். இங்கு ஒரு புதிய வீட்டின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று அப்பகுதி மக்கள் துர்க்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் 17 நாட்டு வெடிகுண்டுகள், 3 கத்திகள், 9 கோடாரிகள் மற்றும் ஏராளமான இரும்பு ராடுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தலை சீர்குலைக்க யாரேனும் திட்டமிட்டு வீட்டில் பயங்கர ஆயுதங்களை பதுக்கினார்களா? அல்லது எதற்காக இங்கு வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? இதில் தொடர்புடையவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பயங்கர ஆயுதங்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்: ஆந்திராவில் தேர்தலை சீர்குலைக்க திட்டமா? appeared first on Dinakaran.