லிப்ட் கொடுத்து அழைத்து சென்று 6ம் வகுப்பு மாணவி பலாத்கார கொலை

காங்டாக்: சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி (11) கடந்த 14ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கால்டாக்சி ஓட்டுநர் (29), லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்து சென்றார். பின்னர் டாக்சியை ெபட்ரோல் பங்க் பகுதியில் நிறுத்தி, அந்த மாணவிக்கு தின்பண்டங்கள் மற்றும் பழச்சாறுகளை வாங்கிக் கொடுத்தார். அதன் பிறகு அந்த சிறுமியை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர், அங்கேயே கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பினார். இதற்கிடையே தனது மகளை காணவில்லை அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். கிட்டதட்ட 3 நாட்களுக்கு பிறகு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக கால்டாக்சி ஓட்டுநர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

The post லிப்ட் கொடுத்து அழைத்து சென்று 6ம் வகுப்பு மாணவி பலாத்கார கொலை appeared first on Dinakaran.

Related Stories: