இன்று காலை ரெட்டம்பேடு சாலையில் நடைபயிற்சி சென்ற பலர், அங்குள்ள நவீன், குமார், ராஜகோபால் ஆகிய 3 பேரின் கடைகள் உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் 3 கடைகளின் உரிமையாளர்களை வரவழைத்தனர். போலீசார் நடத்திய சோதனையில் குமாரின் கடையில் இருந்த ₹10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்கள், நவீனின் கூல்ட்ரிங்க்ஸ் கடையில் இருந்த 8 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
மேலும், ராஜகோபால் மளிகை கடையை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 3 மளிகைக் கடைகளை உடைத்து 2 மர்ம நபர்கள் புகுந்த காட்சிகளை வைத்து, அவர்கள் இருவரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து பணம் உதிரிபாகங்கள் கொள்ளை appeared first on Dinakaran.