அப்போது, செங்கல்பட்டு அருகே திருமணி, ஜானகிபுரம் பகுதியை சேர்ந்த பெயின்டர் நந்தகோபால் வேலையை முடித்துவிட்டு, வீடு திரும்புவதற்காக பைக்கில் செங்கல்பட்டு நோக்கி எதிர் திசையில் வந்துகொண்டிருந்தார். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே 3 கல்லூரி மாணவர்கள் சென்ற பைக், நந்தகோபால் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மேலும், அவ்வழியே நடந்து சென்ற திருமணி பகுதியை சேர்ந்த தணிகாசலம் (32) என்பவர் மீதும் பைக்குகள் மோதிவிட்டன.
இவ்விபத்தில் சட்டக்கல்லூரி மாணவன் சதீஷ், பெயின்டர் நந்தகோபால் ஆகிய இருவரும் தலையில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டனர். இதில் சதீஷுடன் வந்த நண்பர்களான சாய்கிருஷ்ணன், கோகுல், அவ்வழியே நடந்து சென்ற தணிகாசலம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு நகர போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சாய்கிருஷ்ணன், கோகுல், தணிகாசலம் ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தானநிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் பலியான சதீஷ், நந்தகோபால் ஆகிய இருவரின் சடலங்களையும் போலீசார் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி: 3 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.