இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 33 வாகனங்களில் 450 டன் தக்காளி வந்தது. இதனால் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனையானது. ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட பொடி தக்காளி ரூ.90க்கு விற்பனையானது. இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி கூடுதலாக வந்துள்ளது. இதன்காரணமாக, தக்காளி விலை குறைந்துள்ளது. இன்னும் 10 நாளுக்கு தக்காளி விலையில் ஏற்றம் இறக்கமாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசு அதிரடி முயற்சியால் பல வழிகளில் தக்காளியின் விலை குறைக்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் விலை படிப்படியாக மீண்டும் குறையும்’’ என்றார்.
* மல்லி ஒரு கிலோ ரூ.900
கோயம்பேடு பூ மார்க்கெட்டில், ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி வெள்ளி 3ம் நாளை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.900க்கு விற்கப்பட்டது. கனகாம்பரம் ரூ.800, ஐஸ் மல்லி, ஜாதிமல்லி, முல்லை ரூ.500, சாமந்தி, சம்பங்கி ரூ.200, அரளி பூ ரூ.250 பன்னீர்ரோஸ் ரூ.100 சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும் விற்கப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயரும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் அனைத்து பூக்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தோம். நேற்று காலை மார்க்கெட்டில் ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி 3ம் நாளை முன்னிட்டு பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்து 3 நாள் நீடிக்கும்’’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் தக்காளி கிலோ ரூ.150க்கு விற்பனை: ஒரே நாளில் ரூ.50 சரிந்தது appeared first on Dinakaran.
