அப்போது அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. துப்பாக்கிச் சூட்டில் சிஜின் ஜான்சனும், அகிலும் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் எர்ணாகுளம் வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் துப்பாக்கி சூடு நடத்தியது கொச்சி பகுதியைச் சேர்ந்த சமீர், விஜய் மற்றும் தில்ஷன் என தெரியவந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் நேற்று மாலை மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மதுபாரில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கொச்சியில் நள்ளிரவில் மதுபாரில் துப்பாக்கி சூடு: 2 ஊழியர்கள் படுகாயம் appeared first on Dinakaran.