ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பூஜை முடிந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து வானத்தை ஒளிரச் செய்தனர். முன்னதாக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இங்கு கோயிலும், குருத்வாராவும் இருந்தன. அப்போது அதாவது 1947ம் ஆண்டு வரை தீபாவளி கொண்டாடப்பட்டது. நாடு பிரிவினை ஆன பின்னர், பழங்குடியினர் கோயில் மற்றும் குருத்வாராவை எரித்தனர். அதன் பிறகு அங்கு தீபாவளி கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்போது சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கோயிலில் 75 ஆண்டுக்கு பின் தீபாவளி வழிபாடு appeared first on Dinakaran.