இதற்கிடையே, கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 நாளுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.