இதேபோல், குலு மாவட்டத்திலும் மேக வெடிப்பு, மழை காரணமாக ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் வௌ்ளம் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரெஹ்லா பிஹாலில் வீடுகளில் இருந்த பொருள்களை மீட்டு கொண்டிருந்த 3 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இந்துஸ்தான் திபெத் தேசிய நெடுஞ்சாலையில் ஜக்ரி என்ற இடத்தில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மழை, வௌ்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மணாலி, பஞ்சார் ஆகிய இடங்களிலும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சார் பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததால் மணாலி பஞ்சார் நெடுஞ்சாலையின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. இதேபோல், நிலச்சரிவு காரணமாக காசா சம்து சாலை முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
The post இமாச்சலபிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை, வௌ்ளம்: 2 பேர் பலி appeared first on Dinakaran.
